பொதுமக்கள் அவதி

Update: 2026-05-10 08:03 GMT

தென் தாமரைகுளம் ஊரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பனிமய அன்னை ஆலய பின் புறம் ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையோரம் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலையானது மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் குழாயில் பொதுமக்கள் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் குழாய்யை குடம் வைக்கும் அளவிற்கு சற்று உயரமாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜேசுசெல்வா பிரோஸ்மின், தென்தாமரைகுளம்.

மேலும் செய்திகள்