திருச்சி மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர், ஐயப்ப நகர், சுப்பிரமணிய நகர் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் மோட்டாரில் பழுது ஏற்படும் போதெல்லாம் பொதுமக்களுக்கு பயன்படும் காவிரி குடிநீர் சாக்கடையில் திறந்து விடப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பொதுமக்கள் போதிய குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே மின் மோட்டார் பழுதுக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.