ஈங்கூரில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் பின்புறம் பால்பண்ணை உள்ளது. இதன் அருகே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் நடந்து செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைகின்றனர். குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?