புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படும் நிலையில், வாகன ஓட்டிகளும் கோடை வெயிலால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே சாலை ஓரங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.