சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே துலுக்கனூர் 1-வது வார்டில் கோவில் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்காக ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இது சேதமடைந்து பல நாட்களாகியும் பஞ்சாயத்து நிர்வாகம் கவனிக்காமல் கிடப்பில் உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை நம்பி மட்டுமே இப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் மோட்டாரை சரி செய்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.