ஓமலூர் வட்டத்திற்கு உட்பட்டது தொளசம்பட்டி சந்தைப்பேட்டை. அப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியையொட்டி உள்ள குடிநீர் குழாய், சாக்கடை கால்வாயை ஒட்டி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்க போதுமான வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு தண்ணீர் பிடிக்க வருகின்றனர். எனவே சிரமமின்றி குடிநீர் பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரலாமே!