தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சீராக ஒகேனக்கல் குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.