விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. மேலும் வினியோகம் செய்யப்படும் குடிநீரும் உவர்ப்பு தன்மையுடன் வருவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒரு சிலர் பணம் கொடுத்து குடிநீர் வாங்குகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?