பெரம்பலூர் மாவட்டம் குன்னம் எழுமூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள குழாய்களில் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஒருசில பகுதிகளில் குழாய்கள் தரைமட்டத்துக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த குழாய்களில் தண்ணீர் பிடிக்க பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.