சேலம் குகையில் இருந்து அம்பலவாணர் கோவில் செல்லும் வழியில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி தற்போது சேதமடைந்து பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சேதமடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.