சாலை அமைக்கும் போது சாலையின் நடுவில் மழை நீர் தேங்காதவாறு சாலை அமைக்க வேண்டும். அப்போதுதான் அந்த சாலை நீண்டகாலம் உழைக்கும். ஆனால் சாலையில் நடுவில் மழை நீர்தேங்கியவாறு சாலை அமைத்தால் என்ன செய்வது? அப்படித்தான் உடுமலை கச்சேரி வீதி, கபூர்கான் வீதி உள்ளிட்ட சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது.எனவே சாலையின் நடுவில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.