மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு கிராமத்தில் காந்திநகர் பகுதியில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதி கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.