வீணாகும் தண்ணீர்

Update: 2025-10-12 10:34 GMT

கோவை மாநகராட்சி 8-வது வார்டு வெள்ளலூர் முல்லை நகர் பகுதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இதன் மேல் பகுதியில் பிளாஸ்டிக் தண்ணீர் ெதாட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டி அடிக்கடி நிரம்பி வழிகிறது. இதில் இருந்து வீணாகும் தண்ணீர் அந்த பகுதியில் தேங்கி கிடக்கிறது. அந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து அருகில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே அந்த தொட்டியில் இருந்து அடிக்கடி தண்ணீர் வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். மேலும் தேங்கி கிடக்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்