திருச்சி மாவட்டம், முருங்கை ஊராட்சி புதுப்பாளையத்தில் வசிக்கும் மக்களுக்கு கடந்த சில நாட்களாக போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.