ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2025-06-22 15:21 GMT

மத்தூர் ஒன்றியம் ஆனந்தூரில் இருந்து அரசினர் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் பொதுமக்களின் உபயோகத்திற்காக 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியின் கான்கிரீட் தளமானது விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. மேலும் குடிநீர் தொட்டியை சுற்றிலும் சுகாதாரமற்ற முறையில் அசுத்தமாக உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?

-செந்தில், ஆனந்தூர்.

மேலும் செய்திகள்