உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2025-06-08 17:13 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ் வீதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பின்புறம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுரேஷ், மத்தூர்.

மேலும் செய்திகள்