கூடலூர் அருகே லோயர்கேம்ப் வைரவன் வாய்க்கால் முதல் சட்ரஸ் பகுதி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு முல்லைப்பெரியாற்றின் கரை பகுதிகளில் புதர்கள் வளர்ந்து ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளது. மேலும் வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.