நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

Update: 2025-03-02 09:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், அணைப்பாடி கிராமத்தில் ஊர் ஏரியில் உள்ள குடிநீர் கிணறு பொது மக்களுக்கும் ஆதாரமாகவும், பல்லுயிர்களின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த ஏரியில் இருந்து வீடுகள் கட்டுவதற்குத் தேவையான நீரை மோட்டார் மூலம் தனிநபர்கள் எடுத்து செல்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைவதோடு அதைச் சார்ந்துள்ள பொதுக்கிணற்றின் நீர்மட்டமும் குறையும். அதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்