குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?

Update: 2024-09-01 17:18 GMT

பர்கூர் தாலுகாவுக்குட்பட்ட காரக்குப்பம் அருகே 9 பனைமரம் கிராமம் உள்ளது. இந்த கிராம பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்