கம்பி வேலி அமைக்க வேண்டும்

Update: 2024-07-14 18:34 GMT

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட ஊர் சாவடி அருகில் நல்ல தண்ணீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் ஒரு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் கிணற்றின் அருகே விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்தாக உள்ளது. மேலும் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பண்டிகை நடைபெற உள்ள நிலையில் இந்த இடத்தில் கூட்ட நெரிசல் இருக்கும் என்பதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருதி கிணற்றுக்கு கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் முன் வருவார்களா?

மேலும் செய்திகள்