தேங்கும் மழைநீர்

Update: 2024-07-14 18:03 GMT

ஓசூர்- தர்மபுரி புதிய 4 வழி சாலையில் பல்வேறு இடங்களில் மேம்பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதில் பாலக்கோடு அருகே கர்த்தாரப்பட்டி- பாலக்கோடு செல்லும் பாலத்தின் கீழ் சிறிய மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். அதேபோல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் பணிகளை மேற் கொள்ள வேண்டும்.

-சின்னராஜ், பாலக்கோடு.

மேலும் செய்திகள்