வீணாகும் குடிநீர்

Update: 2024-07-14 13:06 GMT
சங்கராபுரம் அருகே பூட்டை மேட்டுத்தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் குழாய் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் முன்பு உள்ள மினிகுடிநீர் தொட்டியின் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே உடைந்த குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்