திறந்தவெளி கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-07-07 17:56 GMT
சின்னசேலம் ஒன்றியம் கனியாமூர் மாரியம்மன் கோவில் மந்தைவெளி பகுதியில் திறந்தவெளி குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை முறையாக தூர்வாரப்படாததால் அது தூர்ந்து போய் பயன்பாடின்றி காணப்படுகிறது. இதனால் கிணற்றில் உள்ள நீரை குடிநீருக்காக பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மேலும் கிணறு திறந்த நிலையில் உள்ளதால் குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே கிணற்றை தூர்வாரி பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்