மினிகுடிநீர் தொட்டி தேவை

Update: 2024-06-23 17:54 GMT
திருநாவலூர் அருகே கூட்டடி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மினிகுடிநீர் தொட்டி அகற்றப்பட்டது. இதனால் குடிநீரை அப்பகுதி மக்கள் குழாய் மூலம் பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு சில நேரங்களில் தேவைப்படும் போது குடிநீர் கிடைப்பதில்லை. எனவே குடிநீரை சேமித்து வைத்து வினியோகம் செய்யும் வகையில் மினிகுடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்