வீணாகும் குடிநீர்

Update: 2024-06-02 15:22 GMT

வீணாகும் குடிநீர்

திருப்பூர் கரட்டாங்காடு 3-வது வீதி புதூர் மெயின் ரோட்டில் எம்.ஆர்.நகர் கோவில் அருகே குழாய் உடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருவதால் இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன. தொடர்ந்து குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வக்குமார், கரட்டாங்காடு.

மேலும் செய்திகள்