குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-05-26 17:31 GMT

பரமத்திவேலூர் அருகே திடுமல் ஊராட்சிக்கு உட்பட்ட தாசம்பாளையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அருகில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குளம் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் செய்திகள்