பள்ளி திறக்கும் முன்பு நடவடிக்கை?

Update: 2024-05-19 16:17 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மாட்டுக்காரனுர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் இரண்டு ஆழ்துளை குழாய்கள் உள்ளன. இந்த இரண்டு குழாய்களும் பழுதாகி கடந்த 5 மாதங்களாக தண்ணீர் வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி திறப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த ஆழ்துளை குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பழனிவேல், புளியம்பட்டி.

மேலும் செய்திகள்