புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2024-05-05 17:56 GMT
சங்கராபுரம் அருகே சவுந்தரவல்லிபாளையம் மணிநதி அருகே பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்காக 3 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குழாய் பொருத்தப்பட்டது. ஆனால் மின்மோட்டார் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணறு பயனின்றி காட்சி பொருளாக இருந்து வந்தது. இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாாிகள் அந்த ஆழ்துளை கிணறுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்