கால்வாயை ஆக்கிரமித்த முட்புதர்கள்

Update: 2024-04-28 17:33 GMT

தர்மபுரியில் உள்ள சனத்குமார் கால்வாய் கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த கால்வாய் ஓடும் பகுதியில் பல்வேறு இடங்களில் செடி, கொடிகள், முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இந்த கால்வாயில் மழைநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் கால்வாயில் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த கால்வாயை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்