பூட்டியே கிடக்கும் குடிநீர் மையம்

Update: 2024-04-28 17:29 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. நீண்ட காலமாக குடிநீர் மையம் பூட்டியே கிடக்கிறது. இந்த குடிநீர் மையம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தற்போது கோடை காலத்தில் பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை பொதுமக்கள் நலன்கருதி திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்த்திபன், ஊத்தங்கரை.

மேலும் செய்திகள்