ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-04-28 16:24 GMT
சங்கராபுரம் அருகே சவுந்தரவல்லிபாளையம் மணிநதி அருகே பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவதற்காக 3 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குழாய் பொருத்தப்பட்டது. ஆனால் மின்மோட்டார் அமைக்கப்படவில்லை. இதனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலம் வர உள்ளதால், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க அந்த 3 ஆழ்துளை கிணறுகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்