குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-04-28 11:49 GMT

தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் இருந்து விநாயகர் கோவில் வரையிலும் குடிநீர் குழாயில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதுடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குழாய் உடைப்புகளை சரி செய்து, சேதமடைந்த சாலைகளை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்