குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2024-04-21 17:23 GMT

ஓசூர்- பாகலூர் சாலையில் கே.சி.சி. நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது, ஓசூர்.

மேலும் செய்திகள்