சாக்கடையில் கலக்கும் குடிநீர்

Update: 2024-04-14 10:23 GMT


திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பவானி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து வினிேயாகம் செய்யப்படுகிறது. ஆனால் குடிநீர் வினியோகம் செய்யும் போது பல்வேறு பகுதிகளில் குடிநீர் வீணாகிறது. அதன்படி மண்ணரை பழைய மின்சார வாரியம் அலுவலகம் அருகே பொருத்தப்பட்டுள்ள வால்வில் இருந்து குடிநீர் வீணாகி சாலையில் தேங்கி சாக்கடையில் கலக்கிறது. இதனால் சமீபத்தில் போடப்பட்ட சாலையும் சிைதந்து போனது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்