குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-03-31 11:28 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தாராபுரம் சாலையில் போலீஸ் நிலையம் எதிரில் எட்டியாக்கவுண்டனூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது இந்த சாலையின் அடியில் பதியப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்