குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-03-10 14:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பல்லூரணி அருகே சாலையோரம் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் காவிரி நீர் ஓடி வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்