வீணாகும் குடிநீர்

Update: 2024-03-10 11:58 GMT

மயிலாடுதுறை மாவட்டம் 30-வது வார்டு பகுதி தூக்கனாங்குளம் தென்கரையில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறி செல்கிறது. வீணாகும் வெளியேறும் குடிநீர் அந்த பகுதியில் உள்ள கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. அவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்