குடிநீர் வசதி வேண்டும்

Update: 2024-03-03 12:39 GMT


திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் ஊராட்சியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வருவதில்லை.கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மைல் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடிக்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பலர் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருநெல்லிக்காவல்

மேலும் செய்திகள்