பழுதடைந்த ஆழ்துளை கிணறு

Update: 2024-03-03 11:44 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தளி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பீல்வாடி கிராமத்தில் பேரளி கிராமத்திலிருந்து பீல்வாடி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சித்தளி ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆழ்துளை கிணறு பழுதடைந்து உள்ளது. இதனால் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்