குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-25 15:25 GMT

வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாச்சிகுப்பம் முதல் சிங்கிரிப்பள்ளி வரை கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?

-கார்த்திக், வேப்பனப்பள்ளி.

மேலும் செய்திகள்