பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-02-18 17:52 GMT

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள பிடாரமங்கலம் ஊராட்சி தேவர்மலை கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் 100-க்கும் மேற்பட்ட குடும்பமாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தெக்கதொட்டி தற்பொழுது வரை பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதுமான அளவு குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்