திறந்து கிடக்கும் மினி குடிநீர் தொட்டி

Update: 2024-02-18 17:07 GMT
சங்கராபுரம் அருகே சவுந்தரவல்லிபாளையம் கிராமத்தில் ரேஷன் கடை அருகில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மினிகுடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6 மாதமாக அந்த மினிகுடிநீர் தொட்டியின் மூடியை காணவில்லை. இதனால் மினிகுடிநீர் தொட்டி திறந்து கிடப்பதால் அதில் குப்பைகள் விழுகின்றன. இதன் காரணமாக தண்ணீர் மாசடைந்து வருவதால், அதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்