மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-02-11 17:39 GMT
மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் கோவில் அருகில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அங்கு ரூ.20 லட்சம் செலவில் கடந்த ஆண்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் அதனை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைவதற்குள் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்

மேலும் செய்திகள்