புதர் மண்டிய குடிநீர் தொட்டி

Update: 2024-02-04 10:45 GMT

களக்காடு யூனியன் தேவநல்லூர் பஞ்சாயத்து தென்கரையில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார் அறையுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. பின்னர் மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் தொட்டி பயன்பாடற்று கொடிகள் படர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. எனவே காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியை புதுப்பித்து மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்