பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-01-28 13:39 GMT

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள அகரம்சீகூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு அதன் அருகே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பழைய நீர்த்தேக்க தொட்டியே தற்போது பயன்பாட்டில் உள்ளது. புதிய நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்