வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2024-01-21 13:19 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் திருப்பாலைத்துறை கிராமம் தெய்வானைநகரில் வாய்க்கால் உள்ளது. குடமுருட்டி ஆற்றில் இருந்து இந்த வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். முறையான பராமரிப்பு இல்லாததால் வாய்க்கால் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தண்ணீர் வழிந்தோட முடியாமல் தேங்கி கழிவுநீராக மாறி உள்ளது. குப்பைகள், கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி வாய்க்காலை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்