பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-01-14 11:41 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் ஊராட்சி 4-வது வார்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இன்றி கடந்த சில ஆண்டுகளாக பயனற்று காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வெயில் காலங்களில் போதிய தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்