பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-01-07 13:45 GMT

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இருந்து ஏ.இ.ஓ. அலுவலகம் செல்லும் சாலையோரத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியை அப்பகுதி மக்கள் மற்றும் இந்த வழியாக செல்பவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்