பழுதடைந்த மேல்நிலைநீர்த்தேக்கதொட்டி

Update: 2023-12-03 12:59 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா மனையேறிப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் தொட்டியை தாங்கிபிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மேல்நிலைநீர்த்தேக்கதொட்டியை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருக்கும் இடைம் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்