வீணாகும் குடிநீர்

Update: 2023-12-03 12:37 GMT

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி கிராமத்தில் 2-வது வார்டு மேற்கு பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் பழுதடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. வீணாகும் தண்ணீர் அருகே தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்